செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

தமிழீழ போராட்டத்தை கொட்ச்சை படுத்தும் கோட்சேயின் வழிதோன்றல்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா இராணுவ பயிற்சி வழங்கியது மிகப் பெரிய தவறு ஆகும் என்று பயங்கரவாத பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான Jaswant Singh தெரிவித்து உள்ளார். அவர் புதுடில்லியில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்து உள்ளார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்தியா செய்த அத்தவறினால்தான் தமிழர்கள் இன்றும் துன்பத்தில் உழல்கின்றார்கள் என்றார்.

சிந்திக்க: தமிழர் விடுதலை போராட்டத்தை கொட்ச்சை படுத்தும் இவர்கள் பாசிச பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிவருடிகள். இவர்கள் மதத்தின் பெயரால் ஒற்றுமையை குலைத்து இந்தியாவில் வர்ணாசிரம கொள்கையை அடிப்படையாக கொண்ட ஒரு ஆட்சியை ஏற்படுத்த துடிப்பவர்கள். இவர்கள்களின் வர்ணாசிரம கொள்கைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் பிரிவினைகளை மறந்து இன, மத வேறுபாடுகளை மறந்து எல்லாரும் தமிழர்கள் என்ற உணர்வோடு செயல்படுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும். அதனால்தான் இந்தியாவில் புலிகளுக்கு ராணுவ பயிற்சி கொடுத்தது மிகபெரிய தவறு என்று பினாத்தி உள்ளார். ஏதோ இவர்களுக்கு மட்டும்தான் இந்தியாவை பட்டா போட்டு கொடுத்த மாதிரி. சீக்கிரம் இவர்களுக்கு சைனாக்காரன் வைப்பான் ஆப்பு. அப்போது தெரியும் ஐயையோ தமிழர்களோடு நாம் இருந்திருக்கலாமே என்று. ராஜ பக்சே கொடுப்பான் பெரிய அல்வா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக