புதன், 2 பிப்ரவரி, 2011

தமிழ் மறவன் முத்துக்குமாரை அவமானப் படுத்திய விடுதலை சிறுத்தைகள்.

தமிழ் மறவன் முத்துக்குமாரின் நினைவு தினத்தில் அவரின் சிலையை திறந்து, இழந்த ஈழத் தமிழர் ஆதரவுகளை மீண்டும் பெறுவதற்காக, தொல்.திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நேற்று திருச்செந்தூரில் நடத்திய விழா, பெரும் சிக்கலில் முடிந்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் மாநாடு நடத்தினாலே, அக்கட்சியின் தொண்டர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும், ரவுடிகளால், பொது மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதும், பொதுச் சொத்துக்கள் சூறையாடப் படுவதும் ஊரறிந்த விஷயம்.
 Thiruma_new11
இதன் தொடர்ச்சியாகவே, நேற்று முன்தினமே, திருச்செந்தூரில், சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் விடப்படும் வகையில், விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் உற்சாக பானம் அருந்தி விட்டு, பெரிய அளவில் சளம்பியிருக்கிறார்கள்.

இவர்களின் மாநாட்டுக்காக, மாநாடு நடைபெறும் இடம் அருகிலும், திருச்செந்தூர் நகரிலும் உள்ள கடைகளை மறைக்கும் வகையில் பல்வேறு டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததும், விடுதலை சிறுத்தை தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பெருமளவில் போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.
 IMG_0301
இந்த அராஜகத்தை கண்டித்த, திருச்செந்தூர் நகர வியாபாரிகள் சங்கம், நேற்று முன்தினமும், நேற்றும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு நடத்தி, கடைகளில் கருப்புக் கொடியை ஏற்றியதோடு மட்டுமல்லாமல், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பது என்றும் முடிவெடுத்துள்ளனர்.
 IMG_0303
ஈழத் தமிழரை கொன்று குவித்த, காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்து, காங்கிரஸின் வாக்குகளைப் பெற்று, எம்.பியாக ஆன, திருமாவளவன், முத்துக்குமாரின் சிலையை திறந்து வைத்ததை விட, முத்துக்குமாருக்கு பெரிய அவமானம் இருக்க முடியாது.

ஈழத் தமிழரை காப்பாற்றுங்கள் என்று தன் உயிரையே நீத்தவன் அவன். ஈழத் தமிழரின் பிணத்தை வைத்து வியாபாரம் நடத்துபவர் திருமாவளவன்.

தமிழ்ப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிய இந்திய ராணுவத்தை அனுப்பிய ராஜீவ் காந்தி மீது விடுதலை சிறுத்தைகளுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்று, கடிதம் எழுதி, சோனியாவின் பாதங்களை கழுவி பிராயசித்தம் தேடியவர் திருமாவளவன்.

இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்ஷேவோடு, விருந்துண்டு, இன்பச் சுற்றுலா சென்று வந்தவர் திருமாவளவன்.

தலித் இளைஞனை கொன்று விட்டு, சட்டத்தின் பிடியில் அகப்படாமல் தப்பி ஓடி, இலங்கையில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவோடு கொஞ்சிக் குலாவியவர் திருமாவளவன்.
 Indian-MPs8_1
ஈழத் தமிழர்கள் கை வேறு கால் வேறாக, கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி வீதிகளில் குப்பைகளைப் போல கிடந்த போது, ஸ்பெக்ட்ரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த கயவன் கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருந்தவர் திருமாவளவன்.

ஏழை தலித்துகள் கருணாநிதி ஆட்சியில் தொடர்ந்து வஞ்சிக்கப் பட்டுக் கொண்டிருக்கையில், ஏழை தலித்துகள் காவல்துறையினரால் அடித்து துவைக்கப் பட்டு கொண்டிருக்கையில், காவல்துறை அதிகாரி எம்.சி.சாரங்கனுக்கு பதவி உயர்வுக்காக கருணாநிதியை கெஞ்சிக் கொண்டிருப்பவர் திருமாவளவன்.
 Indian-MPs4_1
ஊரான் வீட்டு இடத்தில் அலுவலகம் கட்டிக் கொண்டு, அந்த இடத்தை அபகரிக்க நீதிமன்றத்தில் நியாயம் தேடியவர் திருமாவளவன்.   அதற்காக நீதிபதிகளை பின்புற வாசல் வழியாக அணுகியவர் திருமாவளவன்.

ராஜபக்ஷே தனது இனத்துக்காக போராடுகிறான். தனது இனத்துக்கு நியாயம் செய்கிறான். தனது இனத்துக்கு விசுவாசமாக இருக்கிறான்.
ஆனால் திருமாவளவன், ஏழை தலித்துகள் பெயரைச் சொல்லிக் கொண்டே, சொகுசு வாழ்க்கை வாழும், போலி தலித். தலித் இனத்தின் எதிரி. குலத்தை கெடுக்க வந்த கோடரிக் காம்பு.

என் அன்பான உறவுகளே…. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் கணக்கு ஸ்லேட் எப்படி சுத்தமாக துடைக்கப் பட்டதோ, அதே போல விடுதலை சிறுத்தைகளின் ஸ்லேட்டும் துடைக்கப் பட வேண்டும். இதற்கு நீங்கள் வரக்கூடிய மூன்று மாதங்களில் தொடர்ந்து பணியாற்றுங்கள். இடைவிடாமல் பணியாற்றுங்கள்.
 24552781
இது சவுக்கு உங்களுக்கு இடும் அன்புக் கட்டளை. இச்செய்தியை நமது உறவுகள் அனைவருக்கும் அனுப்புங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக