வெள்ளி, 20 மே, 2011

கனிமொழி கவிதை

மூடிய விழிகளைத் தாண்டி துளைக்கின்றது குத்திட்ட பார்வை
(ஓ.பி.சைனியின் பார்வை)
அசைவற்ற முகதில் உறைந்துகிடக்கிறது
(ராசாவின் முகத்தில் சவக்களை)
புன்னகை.
சொல்லொணாப்
பதற்றங்கள் நிறைக்கின்றன என்னை.
(பெயில் கிடைக்குமா, கிடைக்காதா என்று)
அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கிவைத்திருக்கிறேன்
(ராசாவையும், சரத்குமாரையும், சாதிக் பல்வாவையும்)
குருதியில் தோய்த்த
கத்திகளை கருத்த உதிரத்தின் நெடியோடு.

குத்தீட்டிகளும் பஞ்சடைத்த
மிருகங்களும் நிறைந்த அறைக்கு
(சிறை எண் 6. திஹார்)
எப்படித் திரும்புவேன்
இனி எப்படிக் கடப்பது உன்
விழி தவிர்த்த பெருமிதத்தோடு நடந்த
சாலைகளை.
(திஹார் சிறையின் சாலைகள்)
ஓய்ந்து விரிந்த இரவுகளில் கனவாய்
வேண்டுதலாய் யாசித்து சிறு
பிசிறில்லாமல் ஒத்திகைபார்க்கப்பட்ட
இத்தருணம் சிதறி உருள்கிறதுதானே
வகுக்கும் பாதைகளில்.
(நிரந்தரமான சிறைப் பாதை)
நினைவுகள் முகிழதாழ்கள்
நெகிழ்ந்து பேழைகள்
திறக்கின்றன பேய்களும்
தேவதைகளும் ஒருங்கே
அலையும் காடுகளில் முகையும்பூக்களின்
மணம் திக்குகளை நிறைக்கிறது.
அதன் திரை விலக்கித் துவளும்
கரங்கள்.
(கரங்களில் விலங்குகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக