புதன், 12 ஜனவரி, 2011

விடுதலைப்புலிகளுக்கு பிந்தைய காலம் என்பது இல்லை அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.


புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள், தமிழ் மக்களின் தியாகத்தையும், போராளிகளின் தியகத்தை சிதைத்து விடுதலைப்புலிகளின் காலத்திற்கு அப்பாற்பட்ட அடுத்த கட்டபோராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் தமிழ் மக்கள் மீது குழப்பமான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

ஆனால் விடுதலைப்புலிகளுக்கு பிந்தைய காலம் என்று ஒன்று வரப்போவதில்லை என்பதுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அடுத்த கட்ட ஈழப்போரட்டமும் விடுதலைப்புலிகளின் வழிநடத்தலில் தான் தனது பயணத்தை தொடரும் என்பதையும் நாம் இங்கு குறிப்பிடுவதுடன், காலத்தின் தேவை கருதி 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் டெகல்கா இதழுக்கு விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் திரு பா. நடேசன் வழங்கிய நேர்ணானலை நாம் மீண்டும் எமது மக்களின் பார்வைக்கு கொண்டுவருகின்றோம்.

டெகல்கா இதழுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி:

கேள்வி: பிரபாகரனின் மறைவுக்கு பிறகு என்ன ஆகும் என்று பேச ஆரம்பித்துள்ளார்களே?

நடேசன்: நான் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு அவர்களுக்குப் ‘பிந்தைய காலம்’ என்று ஒன்று இருக்கப் போவதில்லை. அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.

இலங்கைத் தமிழர்களின் உணர்வில் சுதந்திரத்திற்கான தாகம்தான் குடிகொண்டுள்ளது. தமது அரசியல் விருப்பங்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமிழர்கள் கருதுகின்றனர்.

போர்க் களங்களில் பின்னடைவுகளும் முன்னேற்றங்களும் தவிர்க்க முடியாதவை. இறுதியாக எதை அடைகிறோம் என்பதுதான் முக்கியம். விடுதலைப் புலிகளுக்கு பிந்தைய காலம் ஒன்று வரும் என காத்திருந்து காலத்தை வீணாக்காமல் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகத்துக்கான போராட்டத்தை அங்கீகரித்து அவர்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தும்படி இந்தியாவையும் உலக நாடுகளையும் கேட்டுக் கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக